Wednesday, January 18, 2012

தீர்த்தமாடும் முறை...

கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும். மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்ய வேண்டும். முதல்முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்த நீரில் மூழ்கக்கூடாது. சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.

முனிவர்கள் பெயரால் தீர்த்தங்கள்

ராமேஸ்வரம் : அகத்தியர் தீர்த்தம்
சிதம்பரம் : வியாக்ரபாதர் தீர்த்தம், கவுதமர் தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம்
சீர்காழி : அகத்தியர் தீர்த்தம், பராசர தீர்த்தம்
திருவாரூர் : விஸ்வாமித்திரர் தீர்த்தம்
பாணதீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
கல்யாணி தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
பேரூர் : அகத்தியர், வசிஷ்டர், நாரதர் தீர்த்தம்.

No comments:

Post a Comment