Thursday, January 19, 2012

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்

ஜோதிர் லிங்கங்கள்

1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526

குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம்-518 101, கர்நூல் மாவட்டம். ஆந்திரா - கர்நூல் மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.

குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.

3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140 கி.மீ.

குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.

4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்-422 212, மஹாராஷ்டிரம். நாசிக்கிலிருந்து 29 கி.மீ.

குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.

5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம்(வேரூன்)-431 102, மஹாராஷ்டிரம்-எல்லோரா குருகே.

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.

6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத்

குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி.

7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்

குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.

8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.

குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.

9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி)-456 001, மத்திய பிரதேசம்

குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.

10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்

குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.

11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.

12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்

குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.

No comments:

Post a Comment